தடகளப் போட்டியில் எமது மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
பேராவூரணி பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் தடகளப்போட்டியில் தங்கம், வெள்ளி,
வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுகன்யா, 800 மீட்டரில் மாயா, 400 மீட்டரில் நிஷா, வட்டு எறிதலில் ஆதித்யா, நீளம் தாண்டுதலில் ருத்ரன், வைசிகா, குண்டு எறிதலில் ஹர்சித் ஆகியோர் தங்கப்பதக்கமும், வட்டு எறிதலில் கீர்த்தனா, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்-பந்தயத்தில் துரைக்கண்ணன், 200 மீட்டரில் யஷ்வந்தன் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், நீளம் தாண்டு-தலில் கிரிதரன், வட்டு எறிதலில் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வெங்கலப்-பதக்கமும் பெற்றுள்ளனர்.
சாதனை புரிந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன், தலைமை பயிற்சி உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணியன், பயிற்சியாளர்கள் லெட்சு-மணன், விக்னேஷ், நடேச-குகன், சுகன்யா, முரளி,
கார்த்திக் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.